தஞ்சாவூர், மார்ச் 18 - தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து அறு வடை தொடங்கியுள்ள நிலையில் உளுந்துக் கான உரிய விலை கிடைக்காததால் விவசாயி கள் கவலை அடைந்துள்ளனர். தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்க ளில் குறுவை, சம்பா நெல் சாகுபடியை விவ சாயிகள் வழக்கம் போல் செய்து வருகின்ற னர். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் நெல் சாகுபடியின் பரப்ப ளவும், மகசூலும் அதிகரித்தது. இதனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை இருப்பு வைப்பதில் அரசுக்கு பெரும் சவால் ஏற்பட் டது. இதையடுத்து, தமிழக அரசின் வேளாண் மைத் துறை சார்பில், நெல் பயிரிடுவதற்கு பதில் மாற்றுப்பயிர் சாகுபடியை விவசாயி கள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப் பட்டது. இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் “நஞ்சையில் தஞ்சை” என்ற சிறப்பு திட்டம் உருவாக்கப்பட்டு உளுந்து சாகுபடியை அதி கரிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்தாண்டு 35,192 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து, நிகழாண்டு 82,745 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டு, தற் போது அறுவடை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் சந்தையில் ஒரு கிலோ உளுந்து ரூ.60 லிருந்து 70 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் இந்த விலை கட்டுப்படியாகவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன் கூறுகையில், “நெல்லுக்கு மாற்றாக உளுந்தை அதிகளவில் விவசாயிகள் பயிரிட் டுள்ளனர். உளுந்து சாகுபடியின் பரப்ப ளவை அதிகரிக்க வேளாண்துறை சிறப்பு திட்டத்தை கொண்டு வந்து ஊக்குவித்தது. நெல் சாகுபடி செய்த விவசாயிகள், அதனை விற்பனை செய்ய கடந்த இரு ஆண்டுகளாக பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு உளுந்து சாகுபடியை செய்தனர். உளுந்து விதை, உழவு, உரம், களையெடுப்பு, அறுவடை என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு ஏற்பட் டுள்ளது. ஆனால் மகசூல் என்பது ஏக்கருக்கு ரூ.300 லிருந்து 400 கிலோ வரை கிடைத்துள் ளது. இதை விற்பனை செய்ய தனியார் கடை களுக்குதான் செல்ல வேண்டியுள்ளது. அங்கு அவர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு கிலோ ரூ.60 லிருந்து 70 வரை கேட்பதால் விவ சாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. நெல் அறுவடை செய்த வயலை அப்படியே தரிசாக விட்டுவிட்டால் களைகள் அதிகம் மண்டும் என்பதால் விவசாயிகள் உளுந்து சாகுபடியை மேற்கொள்கின்றனர். ஆனால் உரிய விலை கிடைப்பதில்லை. எனவே ஒவ் வொரு வட்டத்திலும் ஒரு உளுந்து கொள்மு தல் நிலையம் திறக்க வேண்டும்.
இல்லை யெனில் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஒன்றியமான நாஃபெட் அமைப்பு மூலமாகவும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் வாயிலாகவும் உரிய விலை கிடைக் கும் வகையில் உளுந்து கொள்முதலை செய் தால்தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்காவது விலை கிடைக்கும்” என்றார். இதுகுறித்து வேளாண்மைத்துறை அதி காரிகள் கூறுகையில், தஞ்சாவூர் மாவட்டத் தில் நெல் விளைச்சல் அதிகரித்ததால் மாற்றுப் பயிராக உளுந்து சாகுபடி செய்ய ஊக்கு விக்கப்பட்டது. தற்போது மாவட்டத்தில் 20 சதவீத அளவுக்கு உளுந்து அறுவடை நடை பெற்றுள்ளது. விலை குறைவாக கிடைக்கி றது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். உரிய விலை கிடைக்க வேளாண் வணிகத் துறையினருடன் பேசி உளுந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்கான தீர்வு விரைவில் கிடைக்கும் என்றனர்.