districts

நுகர்பொருள் வாணிபக் கழக உயர் அதிகாரி நெருக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட தர ஆய்வாளர்

தஞ்சாவூர், மே 28-  தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே முன்னையம்பட்டியில் திறந்தவெளி நெல் சேமிப்புக் கிடங்கு உள்ளது. இங்கு தர ஆய்வா ளராக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி  கிளாங்காட்டை சேர்ந்த வீரையன் (52) என்ப வர் பணியாற்றி வருகிறார். இவருக்கு 4  மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு  சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந் துள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று முன்னை யம்பட்டி திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில்  பணியில் இருந்த போது வீரையன் பூச்சி மருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அங்கு பணியில் இருந்த சக ஊழியர்கள் வீரையனை மீட்டு தஞ்சை மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவ லறிந்த வல்லம் காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் மற்றும் காவல்துறையினர் மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு விரைந்து சென்று வீரையனிடம் வாக்குமூலம் பெற்ற னர். அதில் அவர் கூறியிருப்பதாவது: முன்னை யம்பட்டி நெல் சேமிப்பு கிடங்கில் இருந்து கடந்த 19 ஆம் தேதி 407 நெல் மூட்டைகள், 22  ஆம் தேதி 265 நெல் மூட்டைகள் லாரி மூலம் தஞ்சையில் உள்ள குட்ஷெட்டிற்கு அனுப்பி னேன்.  நான் அனுப்பிய நெல் மூட்டைகளை, எடுத்துக் கொள்ளாமல், அங்கிருந்து மீண்டும் முன்னையம்பட்டிக்கு திருப்பி அனுப்பி விட்டனர். இதுகுறித்து கேட்டபோது நுகர் பொருள் வாணிபக் கழக தரக் கட்டுப்பாடு துணை மேலாளர் செந்தில் உத்தரவின் பேரில் தான் நெல் மூட்டைகளைத் திருப்பி அனுப்பிய தாக, இளநிலை தர ஆய்வாளர் விஜயகுமார்  தெரிவித்தார்.  நெல் மூட்டைகள் ஏற்றுக்கூலி, இறக்குக் கூலி, லாரி வாடகை என்று சுமார் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்துள்ளேன். இப்படி இருக்கும்  போது நெல் மூட்டைகளை திருப்பி அனுப்பி  உயர் அதிகாரிகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால் தற்கொலை முயற்சி மேற் கொண்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வல்லம்  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள் ளனர். தொடர்ந்து வீரையன் மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.