districts

img

சுயதொழில் தொடங்க கடன்: மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

கும்பகோணம், மே 22- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக ளுக்கான சங்கம் சார்பில் கும்பகோணம் சரஸ்வதி பாடசாலை பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் கும்ப கோணம் மாநகர பேரவைக் கூட்டம் நடை பெற்றது  கூட்டத்திற்கு மாநகர பொறுப்பாளர் அன்புமணி தலைமை வகித்தார் ராஜேஸ்வரி வரவேற்புரை நிகழ்த்தினார் கூட்டத்தை தஞ்சை மாவட்ட செயலாளர் பி.எம்.இளங்கோவன் துவக்கி வைத்தார். கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், இந்திய தொழிற்சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.மனோகரன், ஓய்வூதியர் சங்க வட்ட தலைவர் துரைராஜ், தமிழ் மாநில காவிரி பாதுகாப்பு சங்க பொறுப்பாளர் சுந்தர.விமலநாதன், உதவி தலைமை ஆசிரியர் லதா அம்பலவாணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைவர் பி.ஜான்சிராணி நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்குவதற்கு வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன் ரூ.75 ஆயிரம் தகுதியானவர்களுக்கு அனைவருக்கும் உடனே வழங்கிட வேண்டும். மிகவும் வறுமையில் வாடும் மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு இலவச வீடு கட்டித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டன.