districts

img

சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கும் விழா

தஞ்சாவூர், மே 17 - தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தெற்கு ஒன்றியம் சார்பில், சிபிஎம் உறுப்பினர் ரசீது  வழங்கும் விழா மற்றும் பேரவைக் கூட்டம் பூத லூர் தனியார் திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை மாலை, கட்சியின் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில் நடை பெற்றது.  மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர் கட்சி உறுப்பினர் களுக்கு ரசீது வழங்கிப் பேசினர். இதில்,  ஒன்றியக்குழு உறுப்பினர்கள்  பலர் கலந்து  கொண்டனர். புதிதாக கட்சியில் இணைந்த 4  பேருக்கு கைத்தறி துண்டு அணிவிக்கப்பட் டது. முன்னதாக, இரண்டாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, மறைந்த தோழர் கே.வரதராசன் உருவப்படத்துக்கு மலர்தூவி  மரியாதை செலுத்தப்பட்டது.

;