districts

img

குடிநீர் தட்டுப்பாடு போக்கிய சிபிஎம் மாமன்ற உறுப்பினர்

கும்பகோணம், ஜூலை 28- மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் வெள்ளப் பெருக்கெ டுத்து நிரம்பி வழிகிறது. இந்நிலையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இயங்கி வரும் தண்ணீர் சுத்தி கரிப்பு நீரேற்றும் நிலையங்களில் உள்ள மின் மோட்டார கள் ஆற்று நீரில் மூழ்கி பழுதடைந்ததால் கும்பகோணம் பகுதிகளுக்கு நீர்வரத்து துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்ட தில் பேரிலும் விரைவில் சீரமைக்க போர்க்கால அடிப்படை யில் பணிகள் நடைபெறுவதாலும் கும்பகோணம் பகுதி யில் குடிநீர் தட்டுப்பாடு கடந்த இரண்டு மூன்று நாட்களாக நிலவி வந்தது. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 34-ஆவது வார்டு குடந்தை மாநகராட்சி மன்ற உறுப்பினர்  ஆ.செல்வம் குடிநீர் கட்டுப்பாட்டை நீக்க உடனடியாக தண்ணீர் டேங்க் மூலம் மக்களுக்கு நேரடியாக தண்ணீர்  விநியோகத்தில் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக தாரா சுரம் சிபிஎம் கிளைச் செயலாளர் எஸ்.வி மணி உடனிருந்தார் இதனால், 34-ஆவது வார்டு பாரதி நகர், மிஷின் தெரு  உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் தட்டுப்பாடு  தற்காலிகமாக நீங்கியது. இதனால், பொதுமக்கள் அனை வரும் சிபிஎம் மாமன்ற உறுப்பினர் ஆ.செல்வத்தை பாராட்டினர்.