districts

img

தஞ்சையில் சிபிஎம் வேட்பாளர் எம்.வைஜெயந்தி மாலா வாக்கு சேகரிப்பு

தஞ்சாவூர், பிப்.10- தஞ்சை மாநகராட்சி 35 ஆவது வார்டில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பா ளர் எம்.வைஜெயந்தி மாலா கூட்டணிக் கட்சியினருடன் வாக்குகள் சேகரித் தார்.  அப்போது, ‘’அடித்தட்டு மக்கள் வாழும் இப்பகுதியில், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவேன். லஞ்சம் - ஊழ லுக்கு இடம் தராத வகையில் நேர்மை யாகச் செயல்படுவேன். மாநகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் மக்களை தினசரி சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வேன். குடிநீர் பிரச்சனையை தீர்ப்பேன். குப்பை களை தினமும் அப்புறப்படுத்த நட வடிக்கை எடுப்பேன். பாதாளச் சாக்கடை திட்டத்தை குளறுபடிகள் இல்லாமல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். தெருநாய்கள் தொல்லை கட்டுப் படுத்தப்படும்” எனக் கூறி வாக்குகள் சேகரித்தார்.  இதில், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பி னர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் பி.செந்தில் குமார், ஆர்.கலைச்செல்வி, என்.வி.கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர்கள், என்.குருசாமி, என். சரவணன், மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, மாவட்டத் தலைவர் அர்ஜூன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் த.முருகேசன், மாநகரச் செயலாளர் வடிவேலன், மாநகரக் குழு உறுப்பினர்கள் வீ.கரி காலன், சி.ராஜன், கே.அன்பு, எம்.ராஜன், வின்சிலா, பைந்தமிழ், காதர் உசேன் மற்றும் கிளை செயலாளர்கள், முன்னணி தோழர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.