districts

img

மாநகராட்சிப் பணியிடங்களை தனியாருக்கு விட்டால் நிர்வாகத்தில் தொய்வு ஏற்படும்

தஞ்சாவூர், நவ.10- தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சியில் 20 வகையான பணியிடங்களை தனியா ருக்கு விட்டால், நிர்வாகத்தில் தொய்வு ஏற்படும் என தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம், தஞ்சாவூர் மாநக ராட்சி அனைத்து அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேரில் மனு கொடுத்த னர். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவல கத்தில் வியாழனன்று மேயர் சண்.ராமநாத னிடம், இக்கூட்டமைப்பின் தலைவர் ஆர். கண்ணதாசன், செயலாளர் எஸ்.சங்கர வடிவேல், இணைச் செயலாளர் சி.மணி, பொருளாளர் கே.அசோகன் உள்ளிட்ட நிர்  வாகிகள் 20க்கும் மேற்பட்டோர் நேரில்  சந்தித்து கோரிக்கை மனுவை அளித்த னர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள 20 மாநகராட்சிகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப அளவுகோல் நிர்ணயம் செய்திடவும், ஓரே சீரான புதிய பணியிடங்களை தோற்றுவித்திடவும், ஏற்கெனவே உள்ள பணியிடங்களை மறு சீரமைக்கவும் அரசாணை எண் 152 பிறப் பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அமல்படுத்தப் பட்டால், வரி வசூலர், ஓட்டுநர், பதிவறை எழுத்தர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப் பிஸ், தலைமை அலுவலக உதவியாளர், மருத்துவ அலுவலர், செவிலியர், மருந்தா ளுநர், பகுதி சுகாதார செவிலியர், கன்சர்  வன்சி இன்ஸ்பெக்டர், நகர சுகாதார செவி லியர், செயல்திறன் பணியாளர் நிலை -1 மற்றும் 2, செயல் திறனற்ற பணியாளர், அலுவலக உதவியாளர், காவலர், துப்புரவு  பணி மேற்பார்வையாளர், மருத்துவ உதவி யாளர், துாய்மைப்பணியாளர் ஆகிய பணியிடங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஓய்வு பெற்ற பின்னர் அந்த பணியிடங்களில் வெளி முகமை மூலம் நிரப்பப்பட உள்ளது. அரசாணை அமல்படுத்தப்பட்டால், மாநகராட்சியில் குடிநீர்ப் பணி, தூய்மைப் பணி, வரி வசூல் போன்ற அன்றாடம் மக்க ளைச் சந்தித்து செயல்படுகின்ற பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் போது அப் பணிகள் தரம் இல்லாமல், நம்பகத் தன்மை  இல்லாமல் அமையும். இதன்காரணமாக 80 சதவீத மாநகராட்சி  பணியாளர்கள் ஒப்பந்த பணியாளர் களாக மாறுவதால், அப்பணியாளர்கள் ஒப்பந்தகாரருக்கு விசுவாசமாக செயல்படு வார்கள். மாநகராட்சி நிர்வாகம் அவர்களை நேரடியாக கட்டுப்படுத்துவதில் மிகுந்த சுணக்கம் ஏற்படும், இதனால் நிர்வாகம் பாதிக்கப்படும். எனவே, மாநகராட்சி பணியை நம்பியி ருக்கும் பணியாளர்களுக்கு உரிய உதவி கள் செய்து, நிர்வாகத்தையும், பணியாளர்  களையும் பாதுகாக்க, இந்த அரசா ணையை ரத்து செய்ய தமிழக முதல்வ ருக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.