தஞ்சாவூர், நவ.23- தஞ்சாவூரில், தனியார் பேருந்து இயக்கும் நேரம் தொடர் பாக ஏற்பட்ட மோதலில் 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டையில் இருந்து இரு தினங்க ளுக்கு முன்பு காலை பி.எல்.ஏ., என்ற தனியார் பேருந்து, வி.பி. ஆர்.,என்ற தனியார் பேருந்தும் புறப்பட்டதில் நேரம் பிரச்சனை ஏற்பட்டது. பயணிகளும் பொது மக்களும் சமாதானப்படுத்திய தால், இரண்டு பேருந்துகளும் புறப்பட்டுச் சென்றன. பின்னர், தஞ்சாவூர் பேருந்து நிலையத்துக்கு வந்த பிறகு, மீண்டும் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களுக்கும் தகராறு ஏற்பட் டது. இதனால், வி.பி.ஆர்., பேருந்து ஓட்டுநர், பி.எல்.ஏ., பேருந்தின் முன் பக்கத்தில் பேருந்தை கொண்டு மோதியுள்ளார். இதையடுத்து, வட்டார போக்கு வரத்து ஆய்வாளர் ஆனந்த், இரண்டு தனியார் பேருந்துகளை யும் பறிமுதல் செய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தினார். இதைத்தொடர்ந்து, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேருந்தை ஆய்வு செய் தார். இந்நிலையில், செவ்வாயன்று மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனை காவல்துறையினர் வி.பி.ஆர்., பேருந்து ஓட்டுநரான பட்டுக் கோட்டையை சேர்ந்த பிரபாகரன் (33), பி.எல்.ஏ., பேருந்து ஓட்டுந ரான ஒரத்தநாட்டை சேர்ந்த ராஜ் குமார் (28), பாபநாசத்தை சேர்ந்த நடத்துநர் ராஜா (35) ஆகிய மூவர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள னர். இது குறித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், ‘‘சம்மந்தப்பட்ட பேருந்தின் உரி மத்தை ரத்து செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் நடந்து வரு கிறது. முதற்கட்டமாக இரண்டு பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.