districts

img

தஞ்சையில் தொடர் கனமழை நெல் மணிகளை விற்பதில் சிக்கல்: ஈரப்பதத்தில் தளர்வு கிடைக்குமா?

தஞ்சாவூர், அக்.21 -  தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், நெல்லை விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் சுமார் 5.20  லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, 85 சதவீதம் அறுவடை  பணிகள் முடிந்துள்ளன. கொள்முதல் நிலையங்களில் அறுவடை செய்யப் பட்ட நெல்லை விவசாயிகள் விற்பனைக் காக குவித்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பெய்த மழையால், நெல் மணிகள் ஈரமாகி  விற்பனை செய்வதில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் கடந்த மூன்று நாட்களாக வெயில் தலைகாட்டியதால் மழையில் நனைந்த நெல்லை உலர வைத்து விவசாயிகள் விற்பனை செய்த னர். இருப்பினும், 17 விழுக்காடு ஈரப்பதம் அளவு இருந்த நெல்லை மட்டுமே கொள்முதல் நிலைய பணியா ளர்கள் கொள்முதல் செய்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை முதல் தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மீண்டும் மழை  பெய்து வருவதால், அறுவடை செய்யப் பட்டு கொள்முதலுக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்மணிகள் நீரில்  நனைந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. தார்ப்பாய் போட்டு மூடி வைத்திருந் தாலும், மழை நீர் புகுந்து ஈரப்பதம் அதிகரித்து காணப்படுகிறது.  இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் களிமேடு, வண்ணாரப்பேட்டை, ஒரத்த நாடு, ஆலக்குடி உள்ளிட்ட பகுதிகளில்  நெல் கொள்முதலில் தொய்வு ஏற்பட்டுள் ளதால், நெல்லை விற்பனை செய்வதி லும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந் துள்ளனர்.
வாழை விவசாயிகள் வேண்டுகோள்
திருவையாறு அருகே வடுகக்குடி, ஆச்சனுார், வைத்தியநாதன்பேட்டை போன்ற கிராமங்களில் கொள்ளிடம் கரையையொட்டி உள்ள நூற்றுக்கணக் கான ஏக்கரில் பயிரிடப்பட்ட வாழைத் தோப்பை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாழையின் வேர்கள் அழுகி  சாய்ந்து கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், தண்ணீர் வடி வதற்கு வழியில்லாமல், வாழைத்தார் களும் முறிந்து சாய்ந்து உள்ளதால்  விவசாயிகள் வேதனை அடைந்துள்ள னர்.  மேலும், நெல் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்கு வது போல, வாழை விவசாயிகளுக் கும் நிவாரணம் வழங்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி களை ஆய்வு செய்து பேரிடர் நிவாரணம்  வழங்க வேண்டும் என வாழை விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.