தஞ்சாவூர், டிச.31- கொள்ளிடம் ஆற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக மணல் அள்ளு வதால், குடிநீர் ஆதாரங்கள் பாதிப்புக்குள் ளாகின்றன. கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப் பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்கக் கோரி விவசாயிகள், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் வீரமாங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி, மரூர், சாத்தனூர் ஆகிய இடங்களில் மணல் குவாரிகள் உள்ளன. இதனால் ஆற்றில் தின மும் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும், அனுமதிக்கப்பட்ட இடங்கள் இல்லாமல் பிற இடங்களிலும் அதிகளவில் மணல் அள்ளப் படுகிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கப்படுவதால், விவசாயத் துக்கும், குடிநீருக்கும் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உள்ளது. கொள்ளிடம் ஆற்றிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு பல மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதால், மணல் குவாரிகளால் குடிநீர் திட்டங்களுக்கு ஆபத்து நேரிடலாம். எனவே, கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலி யுறுத்தி சனிக்கிழமை விளாங்குடி கொள்ளி டம் ஆற்றில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு காவிரி பாசன சமூக செயற்பாட்டாளர், வழக்குரைஞர் வெ.ஜீவக் குமார் தலைமை வகித்தார். விளாங்குடி யைச் சேர்ந்த விவசாயிகள், சமூக ஆர்வலர் கள் கலந்து கொண்டனர். கல்லணை அருகே சாத்தனூரில் மணல் குவாரி உள்ளதால் அங்கும் அனுமதிக்கப் பட்ட அளவை காட்டிலும் கூடுதலாக மணல் அள்ளப்படுகிறது. இதனால் ஒட்டமொத்த டெல்டா மாவட்டங்களிலும் நீர்வளம் பாதிக்கப் பட்டு, விவசாயம் கேள்விக் குறியாகும். கொள்ளிடம் கரையோரங்களில் அனுமதி யில்லாமல் செயல்படும் செங்கல் சூளை களை தடுக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட செங்கல் சூளைகளை கண்காணிக்க வேண்டும். செங்கல் சூளைகளால் காணாமல் போன பாசன வாய்க்கால்களை மீட்டுத்தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.