தஞ்சாவூர், ஜன.31 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ்.விழா அரங்கில் பேராவூரணி கட்டிடப் பொறியாளர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பேராவூரணி சங்கத் தலைவர் பொறியாளர் கே.குட்டியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் ஏ.வி.அருண் வீரப்பன் வரவேற்றார். மாநில துணைத் தலைவர் ரவி, மாநில மக்கள் தொடர்பு அலுவலர் குழந்தைவேலு, மாநில நிர்வாகி வெங்கடாசலம், முன்னாள் மாநில இணைப் பொருளாளர் ஏ.சி.சி.ராஜா ஆகியோர் பேசினர். சிறப்பு விருந்தினராக லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் தொழிலதிபர் எஸ்.கே.இராமமூர்த்தி கலந்து கொண்டார். பொறியாளர் சங்கம் நாட்குறிப்பு புத்தகம் (டைரி) வெளியிடப்பட்டது. புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. மேலும், நாட்குறிப்பு வெளியிட உதவியவர்கள் கௌரவிக்கப்பட்டனர். தமிழக அரசு கட்டுமானப் பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுமானப் பணிகளுக்கு ஆற்று மணல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.