districts

சொத்து வரி உயர்வைக் கண்டித்து ஏப்.11 சிபிஎம் மனு கொடுக்கும் இயக்கம்

தஞ்சாவூர், ஏப்.9 - தமிழக அரசு சொத்து வரி விகிதத்தை அதிகரித்துள்ளதைக் கண்டித்து, பேரூ ராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங் களில் ஏப்.11 (திங்கட்கிழமை) அன்று மனு  கொடுக்கும் இயக்கம் நடைபெறும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் சின்னை.பாண்டியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:  “தமிழக அரசு சொத்து வரி விகிதத்தை 25  விழுக்காடு முதல் 150 விழுக்காடு வரை, பேரூ ராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு, ஒன்றிய அரசின் திட்டங் களின் கீழ் நிதியுதவி பெற வேண்டும் என்றால்  சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித் துள்ளது.  ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு அநியாய மானது. இது மாநில அரசின், உள்ளாட்சி  அமைப்புகளின் உரிமையில் தலையிடுவதா கும். எனவே, தமிழகத்தில் மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயற்குழு முடிவு செய்துள்ளது.  அந்த அடிப்படையில் தஞ்சை மாவட்டத் தில் உள்ள 2 மாநகராட்சிகள், 2 நகராட்சிகள், 20  பேரூராட்சிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சொத்து வரி உயர்வை ரத்து  செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆயிரக் கணக்கானோர் அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளனர். அதேபோல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தேர்வு செய்யப் பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  உறுப்பினர்கள், மன்றக் கூட்டங்களில் தங்கள்  ஆட்சேபனையை பதிவு செய்வார்கள்”. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

கும்பகோணம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கும்ப கோணம் மாநகர ஊழியர் கூட்டம் மாநகர குழு உறுப்பினர் எஸ்.வி.மணி தலைமையில்  நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாநகர செயலா ளர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மிகக் கடுமையாக சொத்து வரியை உயர்த்தியுள்ள தமிழக அரசு,  அதை திரும்பப் பெற வலியுறுத்தி ஏப்ரல்  11 (திங்கட்கிழமை) கும்பகோணம் மாநக ராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட் டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.