தஞ்சாவூர், மார்ச் 12 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எம்.எஸ். விழா அரங்கில் விவசாயிகள் கலந்தாய்வு கூட்டம், வெள்ளி க்கிழமை தமிழ்நாடு விவசா யிகள் சங்க பொறுப்பாளர் வீ.கருப்பையா தலைமை யில் நடைபெற்றது. தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் பேசினர். தமிழ் நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி. ரவீந்திரன் சிறப்புரையாற்றி னார். விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி 1000 கோடி ரூபாய் மதிப்பீட் டில், மேகதாதுவில் அணை கட்டும் முடிவைக் கண்டித் தும், ஒன்றிய அரசு அதற்கு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் மார்ச் 17 அன்று பேராவூரணியில் விவ சாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்துவது. அனைத்து பகுதி களிலும் விவசாயிகள் சங்கத்தை கட்டமைப்பது, ரெட்டவயல் கரும்பு விவசா யிகள், குருவிக்கரம்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நகைக் கடன் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக போராட்டம் நடத்து வது என்பன உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.