தஞ்சாவூர், ஜன.23- புதுக்கோட்டை மாவட் டம் வேங்கைவயல் கிரா மத்தில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில், மனிதக் கழிவு களை கலந்த குற்றவாளி களை, தமிழக அரசும், காவல் துறையும் இதுவரை கைது செய்யவில்லை. இதைக் கண்டித்தும், புதிய குடிநீர் தொட்டி கட்டித் தரக் கோரி யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவையாறு பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா தலைமை வகித்தார். மாவட்டச் செயற் குழு உறுப்பினர் கே.பக்கிரி சாமி மற்றும் நிர்வாகிகள், வாலிபர் சங்கத்தினர் பங் கேற்றனர்.