districts

img

தோழர் பி.முருகன் முதலாம் ஆண்டு புகழஞ்சலி கூட்டம்

தஞ்சாவூர், மார்ச் 20 - அரசுப் போக்குவரத்துக் கழக மத்திய சங்கத் தலைவர் மறைந்த தோழர் பி.முருகன் முதலாம் ஆண்டு புகழஞ்சலி மற்றும் பொது வேலைநிறுத்த விளக்கக் கூட்டம், போக்குவரத்து சங்க துணை பொதுச் செயலாளர் காரல் மார்க்ஸ் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் புகழஞ்சலி உரை நிகழ்த்தினர்.  சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் பி.என்.பேர்நீதி ஆழ்வார், செங்குட்டுவன், விரைவுப் போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், அரசுப் போக்குவரத்து சங்க நிர்வாகிகள் ராமசாமி, முருகானந்தம், ஜீவா, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் சங்கம் திருநாவுக்கரசு, பாஸ்கர், எல்.சௌந்தர்ராஜன், தரைக்கடை சங்கம் மணிமாறன், தொமுச சங்க செயலாளர் கோவிந்தராஜ் உள்ளிட்டோர் அலங்கரிக்கப்பட்ட தோழர் பி.முருகனின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.  தொடர்ந்து நடைபெற்ற வேலை நிறுத்த விளக்கக் கூட்டத்தில், மார்ச் 28, 29 அன்று நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

;