தஞ்சாவூர், டிச.1- தஞ்சை மாவட்டம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராகவும், கட்சி யின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மற்றும் தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவராகவும் பொறுப்பு வகித்து தோழர் ஓ.எஸ்.சத் திய நாராயணன் நினைவு தினம் வியாழனன்று சிபிஎம் தஞ்சை மாவட்டக்குழு அலு வலகத்தில் அனுஷ்டிக்கப் பட்டது. தோழர் ஓ.எஸ்.எஸ் நினைவைப் போற்றும் வகை யில், அவரது உருவப் படத் திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கட்சியின் மூத்த தலைவர் என்.சீனிவாசன், மாவட்டச் செயலாளர் சின் னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீலமேகம், ஆர்.மனோ கரன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள், என்.குருசாமி, என்.சரவணன், துரை.ஏசுராஜா, மாநகரச் செயலாளர் எம்.வடி வேலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.