தஞ்சாவூர், ஜூலை 24 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழிய ராக தஞ்சை ஒன்றியம், வல்லம் பகுதியில் செயல்பட்ட தோழர் என்.ஜி.அந்தோணிசாமி (42) சனிக்கிழமை இரவு உடல் நலக்குறைவால் காலமானார். இவர் வல்லம் பகுதியில் தீக்கதிர் விநியோகஸ்தராக செயல்பட்டவர். கட்சியின் அனைத்து போராட்டங்களிலும் பங்கு பெற்றவர். அவருக்கு மனைவி ஜெர்லின் மேரியும், பிர வீன், புகழேந்தி என்ற இரு மகன்களும் உள்ளனர். இறுதி நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது. சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கோ.நீல மேகம், பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் எம். மாலதி, ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.கோவிந்த ராஜ், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் ஏ.கருப்புசாமி, பன்னீர் செல்வம், சங்கிலி முத்து, அமல் ராஜ், வனரோஜா, பார்வதி, விவ சாயிகள் சங்கம் சண்முகம், சௌந்தர்ராஜன், மாதர் சங்க ஒன்றிய தலைவர் சரிதா மற்றும் கிளை செயலாளர்கள் மலர்வளையம் வைத்து செங்கொடி போர்த்தி அஞ்சலி செலுத்தினர்.