districts

img

பாஜகவின் மதவெறி அரசியலை எதிர்த்து பன்முகப் போராட்டத்தை தொடர்வோம்!

தஞ்சாவூர், ஜூன் 11 -  விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக பொதுவுடமை இயக்கத்தின் தன்னிகரற்ற தலைவரும், தமிழக மாண வர்கள் இயக்கத்தின் முன்னோடியும், பத்திரிகையாளரும், நாவலாசிரியரும், தமுஎகசவை நிறுவிய தலைவர்களில் ஒருவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான தோழர் கே.முத்தையா அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு தின கருத்தரங்கம், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் தலை மை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் வரவேற் றார். 

தோழர் கே.முத்தையாவின் ஆய்வுலகம் என்ற தலைப்பில், பேரா சிரியர் அருணன், தோழர் கே.முத்தை யாவின் படைப்புலகம் என்ற தலைப் பில், எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், தோழர் கே.முத்தையாவின் ஊடக  உலகம் என்ற தலைப்பில், மாநில  செயற்குழு உறுப்பினர்  மதுக்கூர்  ராமலிங்கம் ஆகியோர் கருத்துரை யாற்றினர். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, தோழர் கே.முத்தையா  நினைவு தின உரையாற்றினார்.

சகலகலாவல்லவர்

விழாவில் உ.வாசுகி பேசுகையில், “பல்வேறு பொறுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் கே.முத்தையா, பல இளம் கம்யூனிஸ்ட்களை உருவாக்கியவர், தமுஎகச வை உருவாக்கி, எழுத்தாளர், படைப்பாளர்களை உருவாக்கியதோடு அல்லாமல், அவர்களை எல்லாம் போராளிகளாக மாற்றி, பண்பாட்டு தளங்களில், கலை இலக்கிய தளங்களில் கருத்துரிமையை பாதுகாக்கும் வகையில் செயல்பட விதை போட்டவர் தோழர் கே.எம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சோவியத் பின்னடைவுக்குப் பிறகு பலரும் சோசலிசம், கம்யூனிசம் என்ற வார்த்தையை எழுத்து உலகில் இருப்பவர்கள், சோசலிசம், எதார்த்த வாதம் என்ற கருத்தாக்கத்தை கைவிட்ட போது, கட்சியின் அரசியல் நிலைப்பாட்டில் நின்று, தன்னுடைய செயல்பாட்டில், எழுத்தில், உரையில், சோசலிச எதார்த்த வாதத்தை உறுதியாக பற்றி நின்றவர். 

ஜனசக்தி, தீக்கதிர், செம்மலர் ஆசிரியராக, சென்னை மாவட்டக் குழுவின் முதல் செய லாளர், மாநிலக் குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர் என சகலகலா வல்லவ ராக திகழ்ந்தவர். தனது பணியில் அலுப்பில்லா மல், சோர்வில்லாமல் அனைத்து பணிகளையும் ஏற்றுக்  கொண்டு செயல்பட்டவர். சோசலிசம், நாத்திகம், சாதி எதிர்ப்பு என முற்போக்கு சிந்தனையாளர். மாணவர் சங்கத்தின் தீவிர செயல்பாட்டாளர். 

மார்க்சிய கண்ணோட்டம், வர்க்க கண்ணோட்டம் இன்றைக்கும் தேவைப்படுகிற விஷயமாக உள்ளது. பாஜக வரலாற்றை திரிப்பதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கக் கூடிய முயற்சிகள், எல்லாவற்றிலும் மதச்சாயம் பூசுவது, பழமை என்று சொன்னாலே அவை சிறப்பானது என்ற கருத்தை முன் வைப்பது என்ற கருத்தை தொடர்ச்சியாக செய்து வரு கிறார்கள். இந்த நேரத்தில்தான் தோழர் கே.எம் அவர்களின், “தமிழ் இலக்கியங்கள் கூறும் வர்க்க  சமுதாயம்” போன்ற  மார்க்சிய திறனாய்வு நூல்கள் நமக்கு என்றைக்கும் தேவைப்படுவ தாக உள்ளது. மதச்சாயம் பூசி வரலாற்றை திருத்தி எழுதுகிற பாஜக போன்ற கண்ணோட்டத்திற்கு பதிலடி கொடுக்கிற விதமாக மார்க்சிய கண் ணோட்டத்தில் இப்படிப்பட்ட திறனாய்வுகள் நமக்கு தேவைப்படுகின்றன” என்றார். 

“இடதுசாரிகள் கேரளத்தில் வெல்லவில்லை; மேற்கு வங்கத்தில் இல்லை என்று தோழர்கள் மத்தியில் ஒரு சிலருக்கு சோர்வு ஏற்பட்டிருக்க லாம். வெற்றி பெறுவதற்கு என்ன செய்யலாம் என திட்டமிட்டு அதற்கான திசையில் நாம் பயணிப்போம். மக்களுடைய பிரச்சனைக்காக எந்த கட்சியினுடைய கதவுகள் தட்டப்படு கின்றன என்றால், அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய கதவுகள் தான். ஒரு உதவி என்றாலும், போராட்டம் என்றாலும், பெண்களுக்கு எதிரான வன்முறையாக இருந்தா லும், பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடு மைகள் ஆனாலும், தொழிலாளி வர்க்கமும், விவ சாயிகள் வர்க்கமும் துரோகங்களை எதிர்கொள் ளும் போதும், எப்படிப்பட்ட சூழல் வந்தாலும் முன் வரிசையில் நிற்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான். மக்களின் இத்தகைய நம்பிக்கையை அரசியல் களத்திலும் வென்றெடுக்க அயராது உழைப்போம்” என்றும் அவர் கூறினார்.

 கே.பாலகிருஷ்ணன்

கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் நிறைவுரையாற்றினார். அப்போது அவர், “ஆந்திரம், கேரளத்தை உள்ளடக்கிய பகுதியாக சென்னை மாகாணம் இருந்தது. அக்காலத்தில் பிரிட்டிஷ்காரர்கள் தங்களது வசதிக்காக மாநிலங்களை உருவாக்கி வைத்திருந்தனர். விடு தலைக்கு பிறகு மொழிவாரி மாநிலங்களை உருவாக்க வேண்டும் என முதல் முதலில் குரல்  கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சிதான். இதற்காக மிகப் பெரிய அளவில் ஊர்வலத்தை கம்யூ னிஸ்ட் கட்சி நடத்தியது. அப்போது, காவல் துறை யினர் நடத்திய தடியடியில் பலத்த காயமடைந்த பலரில் தோழர் கே.முத்தையாவும் ஒருவர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு மகத்தான  பங்களிப்பு செய்த முத்தையா, தமிழ் இலக்கி யங்களை மார்க்சிய கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்து வெளிப்படுத்தினார். 

தமிழக வரலாற்றில் எத்தனையோ தலை வர்கள் இருந்தாலும், தமிழ் இலக்கியங்களை ஒரு சரியான மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆய்வு  செய்து, சரியான புரிதலை உருவாக்குவதற்கு காரணமாக பங்களிப்பை ஆற்றிய மகத்தான தலைவர் தோழர் கே. முத்தையா என்றால் மிகையாகாது. 

தோழர் கே.முத்தையாவின் இலக்கிய ஆய்வு களை படிக்கும் போது, தமிழகத்திலே பொருள்  முதல் வாதத்தை, இலக்கியங்கள் மூலமாக புரிய வைத்திருக்கின்ற அவற்றை வெளிச்சம் போட்டு காட்டி இருப்பவர் கே. முத்தையாவை தவிர வேறு எவரும் இல்லை.

தொல்காப்பியம், புறநானூறு, கம்ப ராமா யணம் உள்ளிட்ட இலக்கியங்களில் உடைமை வர்க்கம், உழைப்பாளி வர்க்கம் என இரு வர்க்கங்கள் இருந்ததை வரலாற்றுப் பூர்வமாக எடுத்து எழுதியவர் கே.முத்தையா. 

அவருடைய மகத்தான பங்களிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அவரது பெயரில் வரலாற்று ஆய்வு மையத்தை உரு வாக்கி, அடிக்கடி கருத்தரங்கங்களை முன்னெடுக்க வேண்டும்.

பாஜகவை எதிர்த்து  பன்முகப் போராட்டம்

பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தாலும், இத்தேர்தலில் அக்கட்சி பின்ன டைவை சந்தித்துள்ளது. மோடிக்கு சரிவு ஏற்பட்டுள்ளது உத்தரப்பிரதேசத்தில் மாபெரும் சரிவை சந்தித்துள்ளது. தமிழகத்தில் கால்பதிக்க முடியவில்லை. நாடாளுமன்றத்தில் மிகப் பெரிய அளவில் எதிர்க்கட்சி வலுப்பெற்றுள் ளது. என்றாலும், பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

பாஜக தங்களது கருத்தியல் கோட்பாடுகளை மீண்டும் மக்களிடம் உயிரூட்டுவதற்கு முயற்சி செய்யும். இதை நாம் தவிடுபொடியாக்க வேண்டும். விஞ்ஞானத்தை, வரலாற்றை, இந்தியாவின் பன்முகத்தன்மையை நிரா கரிக்கிறார்கள், இத்தகைய பாஜகவை எதிர்த்து பன்முனைகளில் நாம் போராட வேண்டும். 

பாஜகவின் இந்துத்துவ கோட்பாடுகளை, கருத்தியல் ரீதியாக மக்களிடையே அம்பலப் படுத்தும் பணி நமக்கு உள்ளது. மக்களிடையே மாற்றத்தை உருவாக்க வேண்டும். மார்க்சி யத்தை கொண்டு சேர்க்க வேண்டும்”. 

இவ்வாறு பேசினார். 

விழாவில், மூத்த தலைவர்கள் என்.சீனி வாசன், ஆர்.சி.பழனிவேலு, திமுக மாநகரச் செய லாளரும், தஞ்சை மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், கே.பக்கிரிசாமி, சி.ஜெயபால், பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், என்.சுரேஷ்குமார், எஸ்.தமிழ் செல்வி, க.அருளரசன், எம்.செல்வம், ஆர்.கலைச்செல்வி, என்.சரவணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள், பல்வேறு அரங்க நிர்வாகிகள், தோழமைக் கட்சி  நிர்வாகிகள், பல்வேறு அமைப்பினர், பொது மக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் நன்றி கூறினார்.