districts

img

கொரோனா காலத்தில் சேவையாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தஞ்சாவூர் மாவட்ட மாநாடு சனிக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், கொரோனா பெருந்தொற்று காலத்தில், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வலர்களாக சேவையாற்றிய, மாணவர், வாலிபர் சங்க நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர். 

மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா, மற்றும் பி.அருண்குமார், எஸ்.பிரபாகரன், எஸ்.சக்திவேல், ஜி.வீரையன், வி.அர்ஜூன், அபிஷேக், வி.ராஜாராம், சிரில் இமான், சந்தோஷ், சிலம்பு, வினித், மஹாராஜா, எஸ்.சந்தோஷ்குமார், எஸ்.மணிகண்டன், அஜய், பாலாஜி உள்ளிட்ட மாணவர், வாலிபர் சங்க தோழர்கள் 19 பேரை பாராட்டி, கைத்தறி ஆடை, கேடயம் வழங்கப்பட்டது. 

மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பாராட்டி வாழ்த்திப் பேசினார். 

 

;