தஞ்சாவூர், மே 10 - தஞ்சையில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பரா மரிப்புக் கோட்டத்தின் கீழ், கல்லணை கால்வாயின் குறுக்கே தற்போது அமைந்துள்ள இர்வின் பாலத்திற்கு மாற்றாக கட்டப்பட்டு வரும் புதிய பாலத்தையும், வடவாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தையும், தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “தஞ்சாவூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள சாலைகளில் 9 ரயில்வே மேம்பாலங் கள், 127 பெரிய பாலங்கள், 222 சிறிய பாலங்கள், 5,258 மிகவும் சிறிய பாலங் கள் அமையப் பெற்றுள்ளன. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 14 தரைப் பாலங்களை, உயர்மட்ட பாலங்களாக கட்ட ரூ. 2,030 லட்சங் கள் மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப் பட்டு பணிகள் நடைபெற்று வரு கின்றன. தஞ்சை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணமும், வாகன விபத்துகளை தடுக்கும் வகை யிலும், தற்போதைய சாலையை நான்கு வழிச்சாலையாக பயன்படுத் தும் வகையில், கல்லணை கால்வா யின் குறுக்கே தற்போது அமைந்துள்ள இர்வின் பாலத்துக்கு மாற்றாக 35.2 மீட்டர் நீளம் மற்றும் 10.5 மீட்டர் அகலம் கொண்ட இரு வழிப்பாதையாக நடைபாதையுடன் கூடிய இரு பாலங்கள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மார்ச் 15 ல் துவங்கப் பட்டு, வருகிற ஜூன் மாதம் மேட்டூர் அணை நீர் பாசனத் திறப்பிற்கு முன்பாகவே முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இதே போன்று வடவாற்றின் குறுக்கே 21.6 மீட்டர் நீளம் மற்றும் 10.5 மீட்டர் நீளம் கொண்ட நடைபாதை யுடன் கூடிய இரு பாலங்கள் ரூ.3.68 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரும்” என தெரிவித்தார்.