districts

கூட்டுறவு வங்கியில் மோசடி செய்யப்பட்ட பணத்தை விவசாயிகளிடம் ஒப்படைத்திடுக! ஜூலை 14 தஞ்சையில் காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 8 -  ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், விவசாயிகளிடம் மோசடி செய்யப் பட்ட ரூ.40 லட்சத்தை, விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். குருவிக்கரம்பை தொடக்க  வேளாண்மைக் கடன் சங்கத்தில் நகை  கடன் தள்ளுபடியில், தகுதியுடைய விவ சாயிகளிடம் இதுவரை ஒப்படைக்கப் படாத நகைகளை உடனடியாக ஒப்ப டைக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  ஜூலை 14 (வியாழக்கிழமை), தஞ்சாவூ ரில் கூட்டுறவு சங்க இணைப் பதிவா ளர் அலுவலகம் முன்பு தொடர் காத்தி ருப்பு போராட்டம் நடைபெறும் என அறி விக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சார்பில் மாவட்டச் செய லாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “தஞ்சாவூர் மாவட்டம் சேது பாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல் (டி-1472) தொடக்க வேளாண்மை கூட்டு றவு கடன் சங்கத்தில், விவசாயிகள் பெற்ற கரும்பு பயிர்க் கடன் தள்ளுபடித்  தொகை ரூ.40 லட்சத்தை சம்பந்தப்பட்ட  விவசாயிகளிடம் வழங்காமல், சங்கச் செயலாளர் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து பல்வேறு போராட்டங் கள் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சி யர், கூட்டுறவுத் துறை உயர் அதிகாரி கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரி களிடம் மனு அளிக்கப்பட்டது.

இதை யடுத்து சங்க செயலாளர் மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டு, பணம் கைப்பற்றப் பட்டுள்ளது. இதுவரை அந்தப் பணம்  விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப் படவில்லை.  எனவே, கைப்பற்றப்பட்ட பணத்தை,  சம்பந்தப்பட்ட விவசாயிகள் கணக்கில்  வரவு வைக்க வேண்டும். இதேபோல், சில ஆண்டுகளுக்கு முன்பு தள்ளுபடி செய்யப்பட்ட பயிர்க் கடன், கரும்பு  விதைக்கான பணத்தை விவசாயி களுக்கு வழங்காமல், மோசடி செய்துள் ளதாகவும் புகார்கள் உள்ளன. இது குறித்து, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.  இதேபோல், குருவிக்கரம்பை (டி-1230) தொடக்க வேளாண்மை கடன்  சங்கத்தில், தமிழக அரசு அறிவித்த 2020 ஆம் ஆண்டுக்கான விவசாய நகைக்  கடன் தள்ளுபடி திட்டத்தில், தகுதி யுடைய விவசாயிகள் என்று கூட்டுறவு சங்க இணைப் பதிவாளரால் பரிந்துரை செய்யப்பட்டு, விவசாய நகைக் கடன்  பெற்ற 39 விவசாயிகளுக்கு ஓராண்டு  காலமாக நகைகளை திரும்ப வழங்க வில்லை. இதனைக் கண்டித்தும், இந்த  விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்ப டையில் பயிர்க் கடன் வழங்க வேண்டும்  என வலியுறுத்தியும், ஜூலை 14 காலை 9 மணி முதல் தஞ்சாவூர் கூட்டுறவு சங்கங் களின் இணைப் பதிவாளர் அலுவல கம் முன்பு தொடர் காத்திருப்பு போராட் டம் நடைபெறும். இதில் மாவட்டம் முழு வதும் இருந்து ஏராளமான விவசாயி கள் பங்கேற்பார்கள்.”  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

;