கும்பகோணம், ஏப்.26 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் செம்மங்குடி ஊராட்சிக்குட்பட்ட சேத்திகுளம் தெருவில் உள்ள கள்ளிக்காட்டு மகாமாரியம்மன் ஆலயத்தில் வருடந்தோ றும் பங்குனி மாதங்களில் திருவிழா நடப்பது வழக்கம். ஆனால் கோயிலுக்கு அருகே உள்ள சேத்திகுளம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத் தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கோயில் திருவிழாவில் பங்கேற்க அதே ஊரைச் சேர்ந்த இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர், இந்த கோயில் தமிழக அரசின் இந்து அற நிலையத் துறை கட்டுப்பாட்டில் இருப்ப தால், அறநிலையத்துறை அதிகாரிகளிடம், இந்த வருட திருவிழாவில் தாழ்த்தப்பட்டவர் களுக்கு கோயில் திருவிழாவில் முன்னுரிமை வழங்க வேண்டும். இப்பகுதியில் வசிக்கும் எங்கள் தெருவிற்கு வீதியுலா காட்சியின் போது அம்மன் வர வேண்டும் என தெரி வித்தனர். இந்நிலையில் சாதி வெறியர்க ளின் ஒரு பிரிவினர், செட்டிகுளம் பகுதியில் தாழ்த்தப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதி களுக்கு சுவாமி ஊர்வலம் செல்லக்கூடாது என தெரிவித்தனர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தெற்கு ஒன்றியக் குழுவினர் தலை யிட்டு, சுமூக முடிவு காண கும்பகோணம் கோட்டாட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட் டது.
அதன்படி கும்பகோணம் கோட்டாட்சியர் லதா தலைமையில் சம்பந்தப்பட்ட சாதி வெறி யர்கள், அறநிலையத் துறையினர், காவல் துறையினர் மற்றும் சேத்திகுளம் பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள் உட்பட சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜெய பால், திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செய லாளர் பழனிவேல் ஆகியோர் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சாதி வெறியர்கள் தரப்பில், சம்பந்தப்பட்ட தெருவிற்கு சாமி ஊர்வலம் செல்லக்கூடாது என்றனர். இதனை ஏற்காத மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அரசுத் துறையினர், இதில் சம்பந்தப்பட்ட இந்து அறநிலையத்துறை நிர்வாகமே திருவிழாவை நடத்தும். திருவிழாவில் எவ்வித சட்டம்-ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்ப தற்கு, இந்த ஆண்டு நடைபெறும் கோவில் திருவிழாவின் சாமி ஊர்வலம் எந்த தெரு விற்கும் செல்லக் கூடாது. கோயிலை சுற்றியே சாமி கொண்டு வரப்பட்டு ஆலயத்திற்கு உள்ளேயே சாமி வழிபாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவினை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். இனிவரும் ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை அனைத்து பிரிவின ரையும் உள்ளடக்கிய விழா குழு அமைத்து கோயில் திருவிழாவை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலையீட்டால் தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.