தஞ்சாவூர், ஏப்.16 - தஞ்சாவூரில் பெற்ற தாயை பராமரிக்கா மல் வீட்டுக்குள் பூட்டி வைத்த இரண்டு மகன் கள் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர், காவிரி நகர், 5 ஆவது தெரு வைச் சேர்ந்தவர் ஞானஜோதி(62). இவரது கணவர் திருஞானம். தூர்தர்ஷன் தொலைக் காட்சியில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற திரு ஞானம், 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஞானஜோதியின் மூத்த மகன் சண்முக சுந்தரம், சென்னையில் காவல்துறை தொழில் நுட்ப பிரிவு ஆய்வாளராகவும், இளைய மகன் வெங்கடேசன் தூர்தர்ஷன் சேனலிலும் பணி யாற்றி வருகின்றனர். சொத்து பிரச்னை காரணமாக, இரண்டு மகன்களும் ஞான ஜோதியை ஒரு வீட்டில் வைத்து பூட்டி வைத்திருந்தனர். போதிய உணவு, தண்ணீர் இல்லாமல், எலும்பும், தோலுமாக மாறிய ஞானஜோதி, வீட்டுக்குள் தரையை சுரண்டி மண்ணை தின்று வந்துள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர், ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு, ‘வாட்ஸ் ஆப்’பில் புகார் அனுப்பினார். இதை யடுத்து, ஏப்.14 ஆம் தேதி இரவு சமூக நலத்துறை அலுவலர்கள், ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி விமலா ஆகியோர் ஞானஜோதியை மீட்டனர். இது தொடர்பாக, தமிழ் பல்கலைக்கழக காவல்நிலையத்தில் விமலா புகார் அளித்ததன் பேரில், மூத்த குடி மக்கள் பராமரிப்பு சட்டத்தின் கீழ், பெற்ற தாயினை பராமரிக்காமல் இருந்த இரண்டு மகன் களின் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.