districts

கார் கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி

தஞ்சாவூர், ஜூன் 20-  தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வடசேரியிலிருந்து பாலமுரு கன்(35) என்பவர் வெளிநாடு செல்கிறார். அவரை வழி அனுப்ப, காரில் 6 பேர் திருச்சி விமான நிலையத்துக்கு ஞாயிறு அதிகாலை  சென்றனர். காரை ஓட்டுநர் அன்ப ரசன் (45) ஓட்டிச் சென்றார்.  தஞ்சாவூர் அருகே மருங் குளம் - வல்லம் சாலையில் அமைந் துள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் எதிரே விவசாயி கள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை குவியல், குவியலாக சாலையோரம் குவித்து வைத்து தார்பாய் போட்டு மூடியிருந்தனர். இந்நிலையில், நெல் குவி யல்கள் இருப்பது தெரியாமல் கார் ஓட்டுநர் அவற்றின் மீது மோதினார். இதில் தார்பாய் கார் சக்கரத்தில் சிக்கியதில் அடுத்தடுத்த நெல் குவி யல்களில் மோதிய கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மதுக் கூர் நெம்மேலியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் ஞான சேகரன் என்கிற திருமூர்த்தி (58)  படுகாயம் அடைந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு  அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து விபத் தில் சிக்கியவர்களை மீட்டனர். தொடர்ந்து காரில் பயணம் செய்த ராமமூர்த்தி (50), பாலமுரு கன் (35), மாரிமுத்து (60), சங்கீதா  (40), பிரினீத்(5), ஓட்டுநர் அன்பரசன்  (45) ஆகியோருக்கு லேசான  காயம் ஏற்பட்டது. காயமடைந்த வர்கள் தஞ்சாவூர் தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.  தகவலறிந்த வல்லம் காவல்துறையினர் சம்பவ  இடத்துக்கு சென்று இறந்த திரு மூர்த்தி உடலை மீட்டு தஞ்சாவூர்  மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி  வைத்து வழக்குப் பதிந்துள் ளனர்.

;