தஞ்சாவூர், பிப்.1 - தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகேயுள்ள சொர்ணக்காடு கிராமத் தில், காரைக்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் அகல ரயில் பாதையில் கேட் எண் 132 அமைந்துள்ளது. இந்தச் சாலை சொர்ணக்காடு, வளப்பிரமன்காடு, மணக் காடு, மாத்தூர், ராமசாமிபுரம், ரெட்ட வயல் ஆகிய 6 ஊராட்சிக்கு உட்பட்ட, சுமார் 25-க்கும் அதிகமான கிராமங்களை இணைக்கும் முக்கியச் சாலையாகும். தற்போது அகல ரயில் பாதை பணி யின்போது, ரயில்வே நிர்வாகம் ஆளில்லா ரயில்வே கேட்டை எடுத்துவிட்டு, ரயில்வே சுரங்கப் பாதையாக மாற்றம் செய்தனர். ஆனால் இந்த சுரங்கப்பாதை குறுகலாக வும், முறையான அமைப்புடன் இல்லாத தால், கதிர் அறுவடை இயந்திரம் கொண்டு செல்லவோ, பேருந்து, லாரி, பள்ளி வாகனங் கள், கனரக வாகனங்கள் செல்ல முடியாத வண்ணம், வளைவுகள் வைத்து, வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு வடிவமைத்துள் ளனர். ஒரு புறத்தில் இருந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, மறு புறத்திலிருந்து வரும் வாக னம் தெரியாத அளவிற்கு வளைவுகள் உள்ளது. அதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் சுரங்கப் பாதை யாக இருப்பதால், மழைக் காலங்களில் 10 அடிக்கு மேல் தரைப்பகுதியில் தண்ணீர் நிரம்பி விடுகிறது.
மோட்டார் வைத்து அப்புறப்படுத் தும் போது அந்த இடம் பாசிகள் படர்ந்து நடந்து செல்பவர்கள் மற்றும் இரு சக்கர வாக னத்தில் செல்பவர்கள் வழுக்கி கீழே விழும் நிலைல் உள்ளது. இது சம்பந்தமாக பலமுறை ரயில்வே நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் சரியாக கட்டித் தருவதாக கூறி இறுதியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தவறாக வடி வமைத்து தரைகீழ் பாலம் கட்டியுள்ளனர். இது செங்குத்தாக இருப்பதாலும், ஒரு வாகனம் வரும்போது எதிரே வரும் வாகனம் ஒதுங்க முடியாத நிலையிலும் உள்ளது. எந்த கனரக வாகனமும், பேருந்துகள், லாரிகள், பள்ளி வாகனங்கள் செல்ல முடியாமல் இருப்ப தால் இந்தப் பாலத்தை மாற்றி மேம்பாலமாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி பிப்.8 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியள வில், பேராவூரணி அருகே சொர்ணக்காடு பேருந்து நிறுத்தம் அருகில் சாலை மறியல், ரயில் மறியல் நடத்த உள்ளதாக சொர்ணக் காடு, வளப்பிரமன்காடு, மாத்தூர், ராமசாமி புரம், பின்னவாசல், ரெட்டவயல் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அறி வித்துள்ளனர்.