தஞ்சாவூர், மார்ச் 6- தஞ்சாவூர் மாவட்ட, நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ் சாலையான பெரம்பலூர் - மானாமதுரை சாலையில் கி.மீ. 68/4ல் வடவாறு (கரந்தை) மற்றும்-கி.மீ. 70/4ல் கல்லணை கால்வாய் (ஆற்றுப்பாலம்) ஆற்றின் குறுக்கே செல் லும் தற்போது உள்ள பழைய பாலத்திற்கு மாற்றாக இருவழித்தட அகலம் கொண்ட இரண்டு புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப் படவுள்ளது. கரந்தை - வடவாறு பாலப் பணி நடை பெறுவதால் போக்குவரத்து மாற்றம் பற்றிய அறிவிப்பு கரந்தை - வடவாறு பாலப் பணி நடைபெறுவதால் மார்ச்.9 (புதன் கிழமை) முதல் இவ்வழியாக போக்கு வரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டு, கும்பகோணம் மற்றும் திருவையாறு சாலையிருந்து வரும் நகரப் பேருந்துகள், இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்தும் வெண்ணாறு பாலம் அருகே பழைய திருவையாறு சாலை வழியாக வந்து வடக்குவாசல், சிரேஸ் சத்திரம் சாலை, ஏ.ஒய்.ஏ நாடார் சாலை வழியாக கொடி மரத்துமூலை வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்து செல்ல வேண்டும். அதேபோல், சென்னை, அரியலூர், கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை பகுதி யில் இருந்து வரும் புறநகர் பேரூந்துகள் மற்றும் களரக வாகனங்கள் அனைத்தும் பள்ளியக்ரஹாரம் புறவழிச்சாலை ரவுண்டானா, தாமரை, பெஸ்ட் பள்ளிகள் வழியாக மாரியம்மன்கோயில் புறவழிச் சாலை வழியாக தொல்காப்பியர் சதுக்கம் வழியே தஞ்சாவூர் நகருக்குள் வந்துசெல்ல வேண்டும். ஆற்றுப்பாலப்பணி (இர்வின்பாலம்) நடைபெறுவதால், மார்ச்.09 (புதன்கிழமை) காந்திஜி சாலையில் - அண்ணா சிலையிலி ருந்து இர்வின் பாலம் வரை போக்குவரத்து முற்றிலும் தடைசெய்யப்பட்டு, அனைத்தும் வாகனங்களும் பழைய நீதி மன்றச் சாலை, பெரிய கோவில் சாலை, சோழன் சிலை வழியே அண்ணா சிலை வந்து செல்ல வேண்டும். இப்பாலப் பணிகள் வரும் ஜூன் மாதம் இரண்டாவது வாரம் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் வகை யில் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் முழு ஒத்துழைப்பை மாவட்ட நிர்வா கத்திற்கு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலி வர் கேட்டுக் கொண்டுள்ளார்.