தஞ்சாவூர், மே 7- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத் துறை, தமிழ்நாடு அரசு நிதி நல்கையின் கீழ் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்புச் சொற்பொழிவு வளர் தமிழ்ப்புலம் கருத்தரங்க கூடத்தில் துணைவேந்தர் பேரா.முனைவர் வி.திருவள்ளுவன் தலைமையில் நடைபெற்றது. சொற்பொழிவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மேனாள் பேராசிரியர் முனைவர் வீ.ரேணுகா தேவி, பாரதிதாசன் கவிதைகளில் மொழிபெயர்ப்பு - ஒரு திறனாய்வு எனும் தலைப்பில் பாரதிதாசன் கவிதைகள், மொழிபெயர்ப்பின் பயன்கள், திறனாய்வின் சிறப்பம்சம் குறித்து பேசினார். முனைவர் கு.சின்னப்பன் வாழ்த்தி பேசினார். முனைவர் சௌ.வீரலெட்சுமி வரவேற்றார். முனைவர் சா.விஜயராஜேஸ்வரி நன்றி கூறினார். சொற்பொழிவில் பேராசிரியர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் பங்கேற்றனர்.