districts

உ.பி.யில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த தந்தை-மகன் சுட்டுக் கொலை: வி.தொ.ச கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.23 -  உத்தரப்பிரதேச மாநிலத்தில், நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த தந்தை,  மகன் இருவரையும் சுட்டுக் கொன்ற, பாரதிய  ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்களை கண்டித் தும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் தஞ்சா வூர் மாவட்டம் திருவையாறு பேருந்து நிலை யம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர்.பிரதீப்  ராஜ்குமார் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா, விவசாயிகள் சங்க  மாவட்டப் பொருளாளர் எம்.பழனி அய்யா, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.ராம், கட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்பகோணம்
விவசாயத் தொழிலாளர் சங்க கும்ப கோணம் ஒன்றிய குழு சார்பில் கும்பகோணம்  அருகே உள்ள கொத்தங்குடி கிராமத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயத்  தொழிலாளர் சங்க மாநிலக் குழு உறுப்பி னர் நாகராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் நாகமுத்து, சிபிஎம் ஒன்றியச்  செயலாளர் ஜேசுதாஸ், ஒன்றியக் குழு உறுப்பினர் ரவி ஐயப்பன், மாதர் சங்க ஒன்றிய  தலைவர் மருதம்பாள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

;