districts

img

குடவாசல் ஒன்றிய கிராமங்களுக்கு புதிய தார்ச்சாலை அமைத்துத் தருக! வி.தொ.ச கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர், டிச.30 -  திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத் தில் உள்ள பிரதாபராமபுரம், கண்டிர மாணிக்கம், சித்தாடி, விக்கிரபாண்டியம் ஆகிய ஊராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத்தின் குட வாசல் தெற்கு பகுதி சார்பில், பிலாவடி கடை வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விக்கிரபாண்டியம் ஊராட்சி, புளியஞ் சேரி, ஆற்றங்கரை தெருக்களில் தார்ச் சாலை, சித்தாடி காத்தாயி அம்மன் கோயி லுக்கு செல்லும் சாலை மற்றும் கண்டிர மாணிக்கம், பிலாவடியில் உள்ள பழைய  ஆதிதிராவிடர் சுடுகாட்டு சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளையும் தார்ச் சாலை களாக அமைக்க வேண்டும். பிலாவடி கடைத் தெரு, நால்ரோடு சாலையில் கட்டப்பட உள்ள  பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறையையும் சேர்த்து கட்ட வேண்டும். கண்டிரமாணிக்கம், பிலாவடி, விக்கிரபாண்டியம், சித்தாடி, புளி யஞ்சேரி ஊராட்சிகளுக்கு நூறு நாள் வேலையை தொடர்ச்சியாக வழங்க வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணை செய லாளர் பி.குமேரசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர ் ஆர்.மணியன்,  ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆனந்தன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய தலைவர் ஜெ.சிவசாமி, விவசாயிகள் சங்க  ஒன்றிய செயலாளர் எஸ்.கிருஸ்துவநாதன், நகர செயலாளர் டி.ஏ.சரவணன், மாதர் சங்க  ஒன்றிய செயலாளர் கே.ஜெகதீஷ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;