கும்பகோணம், ஏப்.25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மைதீன் தொழிலாளர்கள் கிளை பரிசீலனை கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் வைரமூர்த்தி தலைமை வகித்தார். மாநகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட குழு உறுப்பினர் எம்.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கும்பகோணத்தில் முக்கிய பகுதியான துக்கம்பாளையம் தெரு, குஞ்சிதபாதம் தெரு, காந்தி பார்க் அருகே உள்ள நகர மேல்நிலைப்பள்ளி எதிரில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை திறக்கக்கூடாது. கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் மீன் மார்க்கெட் முதல் புதிய பேருந்து நிலையம் வரை சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும். சுமார் 250 தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், மைதீன் புகையிலை தொழிற்சாலையை திறக்க வேண்டும். மாநகராட்சியில் அதிகமாக சொத்துவரி வசூல் செய்யும் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.