districts

img

பின்னவாசல் அரசுப் பள்ளி வளாகத்தில் உள்ள மின்மாற்றியை அகற்ற வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 13-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றி யம் பின்னவாசல் கிரா மத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தினுள் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ் வாகச் செல்கின்றன.  மேலும், பள்ளி வளாகத் திற்குள்ளேயே மின்மாற்றி உள்ளது. தாழ்வாகச் செல்லும் மின் கம்பியாலும், பழுதடைந்த நிலையில் உள்ள மின்மாற்றியாலும், அதன் அருகில் விளை யாடும் பள்ளி மாணவர்களின்  உயிருக்கு ஆபத்து ஏற்படும்  சூழல் உள்ளது.  இதுகுறித்து முன்னாள் ஊராட்சி ஒன்றிய துணைப்  பெருந்தலைவர் ராஜமாணிக் கம், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் சி.ஆர்.சிதம் பரம் ஆகியோர் கூறுகை யில், “மக்களைத் தேடி முதல்வர் முகாமில், கல்வித் துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி யிடம், இதுகுறித்து கோரிக்கை  மனு அளிக்கப்பட்டது. இதற்கு அரசு சார்பில் வந்த  பதில் கடிதத்தில், 100  தினங்களுக்குள் அகற்றப் படும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது கிட்டத் தட்ட 8 மாதங்கள் ஆகி யும் இதுவரை மின் கம்பி  அகற்றப்படாமல், மின் மாற்றி இடமாற்றம் செய்யப் படாமல் உள்ளது. இத னால் மாணவர்கள் உயிருக்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  கடந்த ஆண்டு அருகில் உள்ள சித்தாதிக்காடு பகுதி யில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், இதே கிராமத்தைச் சேர்ந்த  பொறியாளர் ஒருவர் உயிரி ழந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும், உரிய  நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. அரசு உத்தர விட்டும் மின்வாரிய அதிகாரி கள் அலட்சியம் காட்டுகின்ற னர்.  எனவே இம்மாத இறுதி யில் மாணவர்கள், பெற்றோர் கள், விவசாயிகள், விவசா யத் தொழிலாளர்கள், கிராமத் தினரை இணைத்து சாலை மறியல் போராட்டம் நடத்தப் படும்” என தெரிவித்து உள்ளனர்.