தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தலைக் கவசம் அணிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவர் அப்துல் கனி துவக்கி வைத்தார். இதில் பாபநாசம் அரசு வழக்கறிஞர் வெற்றிச் செல்வன், கூடுதல் அரசு வழக்கறிஞர் சுதா, பாபநாசம் டி.எஸ்.பி பூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.