districts

ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாநாடு

 பாபநாசம், மே 22-  தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க 2 வது மாநாடு நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் அசரப் அலி தலைமை வகித்தார்.  ராமதாஸ், பாக்கிய ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கெளரவத் தலைவர் காதர் உசேன், ஒன்றியச் செயலாளர் சங்கர், ஒன்றியப் பொருளாளர் கோபிநாதன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜெயபால், மாவட்ட துணைச் செயலாளர் பார்த்தசாரதி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் முரளிதரன் ஆகியோர் பேசினர்.  மாநாட்டில், உழவர் அட்டையை காரணம் காட்டி நல வாரிய பதிவை ரத்து செய்யக் கூடாது. கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையை விரிவுபடுத்தி தரமாக போட வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.