தஞ்சாவூர், நவ.5 - பொக்லைன் இயந்திரம் மூலம் நடை பெற்ற மழைநீர் வடிகால் சீரமைப்பு பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து சேத மானது. தஞ்சாவூரில், அரண்மனையைச் சுற்றி யுள்ள நான்கு ராஜவீதிகளிலும் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் இந்த வடி கால் மீது ஆக்கிரமிப்புகள் இருந்ததால் அதனை அகற்றிவிட்டு கான்கிரீட் மூலம் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் கீழராஜவீதி பிரதான சாலையில் தற்போது மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரு கின்றன. இந்த சாலையில் வரதராஜ பெருமாள் கோயில் எதிரே வெள்ளிக்கிழமை இரவு பொக்லைன் இயந்திரம் மூலம் சீர மைப்பு பணிகள் நடைபெற்ற போது, சாலை யோரம் இருந்த பழமையான கட்டடம் அருகே வாய்க்கால் சீரமைக்க பள்ளம் தோண்டப் பட்டது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடி யிருக்கவில்லை. இருந்தாலும், கட்டிடத் தின் முகப்பு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் அடுப்பு சர்வீஸ் சென்டர் ஆகியவை இருந்தன. இந்நிலையில், வெள்ளியன்று இரவு வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி கள் நடைபெற்ற நிலையில், திடீரென இந்த கட்டிடம் இடியத் தொடங்கியது. மேலும் அதன் அருகில் இருந்த மின்கம்பமும் சாய்ந்து விழுந்தது. சிறிது நேரத்தில் கட்டிடத்தில் ஒரு பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. உடனடியாக இதுகுறித்து கிழக்கு காவல் துறை, தீயணைப்புத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு அனைத்து அதிகாரிகளும் விரைந்து வந்தனர். மின் இணைப்பை முதலில் துண்டித்தனர். இதையடுத்து இடிபாடுகள் அகற்றும் பணி மற்றும் மின் இணைப்பு சீரமைக்கும் பணி நடைபெற்றது. இரவு நேரம் என்பதால் கட்டி டம் இடிந்து விழுந்ததில் உயிர்ச் சேதம் ஏற்பட வில்லை. இருப்பினும் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகின.