districts

துணை மின் நிலையங்களில் அவுட்சோர்சிங் நடவடிக்கையை கைவிடுக! மின் ஊழியர்கள் வலியுறுத்தல்

கும்பகோணம்,  ஜூலை 20 - தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் கும்பகோணம் வடக்கு கோட்டப் பேரவை கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் கோட்டத் தலைவர் பி.ராதா தலைமையில் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் தேவேந்திரன் வேலை அறிக்கையை முன்மொழிந்தார். மாநில துணை தலைவர் எஸ்.ராஜாராமன் நிறைவுரையாற்றினார். கண்ணதாசன் நன்றியுரையாற்றினார்  பேரவையில் புதிய கோட்டத் தலைவராக கோபால்சாமி (செம்மங்குடிபிரிவு), கோட்டச் செயலாளராக செந்தில்வேல் (திருநீலக்குடிபிரிவு), துணைத் தலைவராக கண்ணதாசன் (ஆடுதுறை பிரிவு), துணைச் செயலாளராக சுதாகர் (செட்டிமண்டபம் பிரிவு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.   ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். புதிய பிரிவுகளுக்கான பதவிகளை அனுமதிக்க வேண்டும். துணை மின் நிலையங்களில் அவுட்சோர்சிங் நடவடிக்கையை கைவிட வேண்டும். ஒப்பந்த ஊழியர், பகுதிநேர ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கான உரிமைகள் குறித்த உத்தரவை வெளியிட வேண்டும். சொந்த மாவட்டங்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.