districts

பேராவூரணி அஞ்சல் நிலையத்தில் தமிழ் தெரியாதவர்களுக்கு பணி பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர், ஜூலை 9 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அஞ்சல் நிலையத்தில் அஞ்சலக உதவியா ளர்களாக பணி செய்பவர்கள், தமிழ் தெரியா தவர்களாக இருப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்காக பொதுமக்களுக்கும் வடமாநில பணியாளர்களுக்கும் இடையே மொழி பெயர்ப்பாளர்களாக இரண்டு பேர்  அமர்ந்துள்ளனர். இரண்டு பேர் செய்யும் பணியை நான்கு பேர் செய்து வருகின்றனர். தமிழ் தெரியாததால் பொதுமக்களோடு தொடர்பு கொள்ள முடியாமல், தமிழில் எழுதித் தரும் விண்ணப்பங்களை படிக்கத் தெரியாமல், வடமாநில பணியாளர்கள் மொழி பெயர்ப்பாளர்களிடம் கேட்டுக் கேட்டு பணிகளை செய்து வருகின்றனர். இதனால் பெரும் காலதாமதம் ஏற்படுகிறது. தமிழ்நாட்டில் ஊரகப் பகுதியில் உள்ள அஞ்சலகத்தில் தமிழ் தெரியாதவர்களை பணியில் அமர்த்தி, தமிழ் மட்டுமே தெரிந்த தமிழர்களை வஞ்சிக்கும் செயலை ஒன்றிய  அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. தமிழ் தெரியாத வேறு மாநிலத்த வர்களை பணிக்கு அமர்த்தும்போது, மாநில  மொழியில் எழுதுவதற்கும் பேசுவதற்கும் பயிற்சி கொடுக்கப்படும் என்று கூறப்படு கிறது. ஆனால், பேராவூரணியில் பணி யாற்றி வரும், இந்த வடமாநில பணியாளர் கள் தமிழ் எழுதவோ, பேசவோ தெரியாமல் தடுமாறுகின்றனர். அஞ்சலகத்திற்கு வரும்  வாடிக்கையாளர்கள் இந்தப் பணியாளர் களிடம் ஏதேனும் சந்தேகங்களைக் கேட்டால்  அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள குறிப்பாக ஊரகப் பகுதி அஞ்சலகங்களில் தமிழ் தெரியாத வர்களை பணிக்கு அமர்த்துவதை அஞ்சல கத் துறை கைவிட வேண்டும். பேராவூரணி யில் பணியாற்றும் தமிழ் தெரியாத வட மாநில பணியாளர்களை உடனடியாக பணி  மாறுதல் செய்ய வேண்டும். தமிழ் தெரிந்த வர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். உடனடியாக இதை நடைமுறைப்படுத்த வில்லை என்றால் பொதுமக்களை திரட்டி  போராடும் நிலை ஏற்படும் என தமிழ் வழிக்  கல்வி இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.