தஞ்சாவூர், ஜன.16 - தஞ்சாவூரில் தொல்லியல் துறை சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு மரபு சார் கலை நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை தொடங்கின. தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில் பொங்கல் விழாவை முன்னிட்டு மரபுசார் கலை நிகழ்ச்சிகள் தஞ்சா வூர் அரண்மனை வளாகத்தில் உள்ள தர்பார் கூடத்தில் தொடங்கியது. முன்னதாக தொடக்க விழாவிற்கு வந்தவர்களை திருவாரூர் தொல்லியல் அலுவலர் சு.மூ.உமையாள் வர வேற்றார். சரஸ்வதி மகால் நூலக ஆளுமை குழுவின் ஆயுள்கால உறுப்பினர் சிவாஜி ராஜா போன்ஸ்லே தலைமை வகித்தார். சரஸ்வதி மகால் நூலக தமிழ் பண்டி தர் மணி.மாறன், தஞ்சாவூர் கலைக்கூட காப்பாட்சியர் சிவகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலை நிகழ்ச்சிகளின் நோக்கம் குறித்து தஞ்சாவூர் மாவட்ட தொல்லியல் அலுவலர் த.தங்கதுரை உரை யாற்றினார். இறுதியாக திருச்சி மாவட்ட தொல்லியல் அலுவலர் அ.சாய்பிரியா நன்றி தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை பி.எம்.இளைய ராஜா குழுவினரின் நாதசுரம், கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், திங்கள்கிழமை மாலை ஸ்டார் கலைக்குழு சார்பில் தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், கரகம் ஆகிய கலை நிகழ்ச்சி களும் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளின் நிறைவு நாளான செவ் வாய்க்கிழமை (ஜன.17) காலை 10 மணி முதல் 12 மணி வரை, திருவாரூர் அருள் கலைக்குழு சார்பில் நாதம், தப்பாட்டம், கரகம், களியாட்டம், கருப்புசாமி ஆட்டம் ஆகி யவையும், மாலை 3 மணி முதல் 5 மணி வரை மல்லிகா பிரகாஷ் கலைக்குழுவின் சார்பில் மேளம், நாதம், கர காட்டம், நாட்டுப்புற பல்சுவை நிகழ்ச்சிகளும் நடை பெற உள்ளன.