தஞ்சாவூர், டிச.22- அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில், சுவர் இடிந்து மின்மாற்றியில் விழுந்ததால், அரவை பணிகள் பாதிக்கப்பட்டன. தஞ்சாவூர் அருகே குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை செயல்பட்டு வரு கிறது. ஆலையில் 2022 – 23 ஆம் ஆண்டு கரும்பு அரவை பருவம் கடந்த நவ.23 ஆம் தேதி தொடங்கியது. தற்போது அரவைப் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், கரும்பாலை கழிவுகளை சேமித்து வைக்கக் கூடிய பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் திடீரென புதன்கிழமை இடிந்து, மின்மாற்றியின் மீது விழுந்தது. இதில் மின்மாற்றி சேதமடைந்ததால் அரவை பணிகள் முழுமையாக பாதிக்கப் பட்டன. இதனால், அரவைக்கு கொண்டு வந்த கரும்புகள் தேக்கமடைந்தது. இருப்பினும், அப்பகுதியில் யாரும் இல் லாததால் உயிர் சேதம் இல்லை. தொடர்ந்து சேதமடைந்த மின்மாற்றியை பணியாளர் கள் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “சர்க்கரை ஆலையில், கரும்பாலைக் கழிவு (மொலாசஸ்) உற்பத்தி செய்யப்படு கிறது. இந்த கரும்பாலைக் கழிவு விவசாயி களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அதன் பிறகு பொது ஏல மூலம் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், விவசாயி களுக்கு ஆலை நிர்வாகத்தின் ஏலத் தொகை யை வழங்க முடியாத சூழலில், கரும்பாலை கழிவுகளை எடுக்க முன்வரவில்லை. இத னால், கரும்பாலை கழிவு அதிகளவில் தேக் கமடைந்து, சுவரின் தன்மையே மாறி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட காரணம்” என்றனர்.