தஞ்சாவூர், ஜன.19- தஞ்சாவூர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம், தொழில் மற்றும் வர்த்தக சங்கம் சார்பில் கணினி கணக்கியல் (டேலி) பயிற்சி முடித்த மாற்றுத்திறனாளி களுக்கு சான்றிதழ் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் 21 பேருக்கு கணினி கணக்கி யல் பயிற்சி 30 நாட்கள் நடைபெற்றது. பயிற்சி முடித்தவர் களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் சங்கீதா, பயிற்சி மைய இயக்குநர் அலமேலு, தொழில் வர்த்தக சங்கத் துணைத் தலைவர் சுப்பிரமணியம், முன் னோடி வங்கி மேலாளர் பிரதீப், இந்திய செஞ்சிலுவை சங்கத் துணைத் தலைவர் முத்துக்குமார், இன்னர்வீல் ஹெரிடேஜ் சிட்டி சங்கத் தலைவர் உமையாள் சுப்பிரமணி யம், செயலாளர் ஹேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.