districts

img

வேலைவாய்ப்பு முகாமில் 702 பேருக்கு பணி நியமன ஆணை

கள்ளக்குறிச்சி, மார்ச் 6- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாம்க ளில்  702 பேருக்கு பணி கிடைத் திருப்பதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக  நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்  சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய ஆட்சியர், “இளைஞர்களின் கல்வித்  தகுதிக்கேற்ப புதிய வேலை வாய்ப்பு களை ஏற்படுத்துவதற்காக அரசு சார்பில் பல்வேறு முன்னணி தனி யார் நிறுவனங்களுடன் இணைந்து மாவட்டந்தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது”என்றார். கள்ளக்குறிச்சியில் நடந்த முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 150க்கும் மேற்பட்ட  முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் 44 மாற்றுத் திறனாளிகள், 1,745 பெண்கள் உட்பட  3,688 இதில் கலந்து கொண்டனர். இதில் 263 பெண்கள் மற்றும் 17 மாற்றுத்திறனாளிகள் உட்பட 702 பேர் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார். மேலும் தமிழ்நாடு திறன் மேம் பாட்டு கழகத்தால் நடத்தப்படும் திறன் பயிற்சிக்கு 37 பேர் பதிவு செய்துள்ளதாகவும் ஆட்சியர் தெரி வித்தார். இதில் மண்டல இணை இயக்கு நர் (வேலை வாய்ப்பு) லதா, மாவட்ட  வேலைவாய்ப்பு அலுவலர் முரளி தரன், ஊரக வாழ்வாதார இயக்கு நர் சுந்தர்ராஜன், கல்லூரியின் தலை வர் மகுடமுடி, கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.