தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளிக்கு, தமிழ்நாடு அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் சார்பில், மாணவர்கள் பயன்பாட்டிற்கான 200 இருக்கைகள் வழங்கப்பட்டன. தலா ரூ.17 ஆயிரம் என மொத்தம் ரூ.34 லட்சம் மதிப்புள்ள இருக்கைகளை மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கல்யாணசுந்தரம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், தஞ்சை சட்டப்பேரவை உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.