தஞ்சாவூர், நவ.30- அகில இந்திய விரல் ரேகை நிபுணர் தேர்வில் தஞ்சாவூர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஜெ. அமலா (28) முதலிடம் பெற்றார். இதையடுத்து அவரை, தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலை வர் ஏ.கயல்விழி நேரில் வரவ ழைத்து பாராட்டு தெரிவித்தார். தில்லியில் கடந்த 8-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை, தேசிய அளவிலான விரல் ரேகை நிபுணர் தேர்வு, தேசிய குற்ற ஆவணக் கூடத்தில் நடைபெற்றது. தேர்வில் தேசிய அளவில் 236 பேரும், தமிழ்நாட்டிலிருந்து 174 பேரும் தேர்வு எழுதினர். இவர்களில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையில் விரல் ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாள ராக பணியாற்றி வரும் ஜெ.அமலா பங்கேற்று தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் திங்களன்று மாலை வெளியாகின. இதில், அமலா அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்தார். இதையடுத்து, தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஏ.கயல்விழி, அகில இந்திய அள வில் முதலிடம் பெற்ற அமலாவை நேரில் வரவழைத்துப் பாராட்டினார்.