districts

அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்

தஞ்சாவூர், அக்.28 -  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டையில் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் பிர பாகரன் தலைமையில் நடைபெற்றது.  இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட  தனி வட்டாட்சியர்கள் பாஸ்கர், தரணிகா, திருமால், கண்ணகி, அரசுப்  போக்குவரத்துக் கழக கண்காணிப்பா ளர் ராஜா, மோட்டார் வாகன ஆய்வா ளர், அலுவலக இளநிலை உதவியாளர்,  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்  சிவகுமார், நகராட்சி சுகாதார அலுவலர் நெடுமாறன், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, மாவட்ட துணைத் தலைவர்  ஏ.மேனகா மற்றும் மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டனர்.  

இக்கூட்டத்தில், மாற்றுத் திறனாளி கள் சங்க நிர்வாகிகள் கஸ்தூரி, மேனகா ஆகியோர் பேசுகையில்,  “இது  போன்ற மாதாந்திர குறைதீர் கூட்டத்தில்  மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவ லர் கலந்து கொள்வதை உறுதி செய்ய  வேண்டும். அவர் தவிர்க்க இயலாமல் கலந்து கொள்ள முடியவில்லை என்றால், அலுவலர் கலந்து கொள்ளும்  ஒரு நாளில் கூட்டத்தை நடத்த வேண்டும்.  அதேபோல் அரசின் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்காத அதி காரிகள் மீது கோட்டாட்சியர் நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்படும். மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப்  பேருந்துகளில், இரண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு மேல் அனுமதிக்க முடியாது என்ற கட்டுப்பாட்டை நீக்க  வேண்டும். அனைத்து மாற்றுத்திற னாளிகளையும் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும்.  வழிபாட்டுத் தலங்களில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில்  சக்கர நாற்காலி வசதி செய்து தர  வேண்டும். ஒன்றிய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்கு மானியத்து டன் கடன் வழங்க அனுமதித்தும், சில வங்கி மேலாளர்கள் அவற்றை புறக் கணிக்கிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும். திருச்சி சென்று அலை வதை தவிர்க்கும் வகையில், ரயில் பயண அட்டை வழங்க, வட்டார அள வில் சிறப்பு முகாம் நடத்த வேண்டும்” என வலியுறுத்தினர்.  இதுகுறித்து மாவட்ட ஆட்சிய ரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட் சியர் பிரபாகரன் தெரிவித்தார்.