தஞ்சாவூர், ஜூன் 9- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அனைத்துத் துறை அலுவலர் கள் மற்றும் விவசாயிகளுடனான ஒருங்கி ணைப்புக் கூட்டம் புதனன்று அம்மை யாண்டி, பெரியநாயகிபுரம், ஒட்டங்காடு மற்றும் இடையாத்தி ஆகிய நான்கு ஊராட்சிகளிலும் நடைபெற்றது. தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுதல், நீர் வள ஆதாரங்களை பாது காத்தல், கால்நடைகளை பாதுகாத்து பால் வளம் பெருக்குதல், பண்ணைக் குட்டைகள் அமைத்து குறுகிய கால பயிர்கள் சாகுபடி செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி ஒவ்வொரு ஊராட்சியையும் தன்னிறைவு பெற்றதாக மாற்ற வேண்டும் என்பதற்காக கூட்டம் நடத்தப்பட்டது. இதில், வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் சுருளிராஜன், விதை ஆய்வு அலுவலர் என்.நவீன் சேவியர், வேளாண்மை அலுவலர் எஸ்.ராணி ஆகியோர் கலந்து கொண்டு தொழில்நுட்ப ஆலோசனைகள், தரமான விதைகள் உற்பத்தி குறித்து எடுத்துக்கூறி, செயல் விளக்கம் அளித்தனர். கால்நடை மருத்துவ முகாம் நடை பெற்றது. சான்று பெற்ற உளுந்து விதைகள், காய்கறி விதைகள், கைத்தெளிப்பான் மற்றும் விசைத் தெளிப்பான்கள் தேர்வு செய் யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப் பட்டன. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலை வர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வேளாண் பொறியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், நூற்றுக்கணக்கான விவ சாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.