districts

திருமணம் செய்ய வலியுறுத்திய இளம்பெண் கொலை 3 மாதங்களுக்கு பின் எலும்புக் கூடு மீட்பு: 2 பேர் கைது

தஞ்சாவூர், டிச.22 -  இளம்பெண் ஒருவர், தனது அண்ணனு டன் சேர்ந்து காதலனால் கொலை செய் யப்பட்ட நிலையில், நான்கு மாதங்களுக்கு  பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத குளத்தில்  இருந்து இளம்பெண் எலும்புக்கூடாக கண்  டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் வாத்திய னேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் உடை யார்(50). விவசாயத் தொழிலாளியான இவ ரது மகள் வாசுகி (25), அதே பகுதியை சேர்ந்த மாதவன் (25) என்பவரைக் காத லித்து வந்துள்ளார். இந்நிலையில், மாதவன் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி சுற்று வட்டார பகுதியில், தனக்கு சொந்தமான ஆடுகளை கிடை போட்டு வந்துள்ளார். அவ்வப்போது மட்டுமே மாதவன் தனது ஊருக்கு சென்ற போது, வாசுகியுடன் தனி மையில் இருந்துள்ளார். இதில் வாசுகி  கர்ப்பமானார். கர்ப்பமான விவகாரம் பெற் றோருக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்பதால், வாசுகி கடந்த ஆக.20  ஆம் தேதி மாதவனை பார்க்க செங்கிப் பட்டிக்கு வந்துள்ளார். இதற்கிடையில், வாசுகி காணாமல் போனது குறித்து அவரது தந்தை உடையார் கீழத்தூவல் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கீழத்தூவல்  காவல்துறையினர் நடத்திய விசாரணை யில் வாசுகியும், மாதவனும் காதலித்தது தெரிந்தது. அப்போது, செங்கிப்பட்டியில் இருந்து மாதவன் கடந்த மூன்று நாளுக்கு  முன்பு ஊருக்கு வந்திருப்பதை அறிந்த  காவல்துறையினர், அவரிடம் விசாரித்த னர். விசாரணையில், வாசுகி ஊரை விட்டு,  செங்கிப்பட்டி வந்து மாதவனை சந்தித்த  போது, திருமணம் செய்து கொள்ள வலி யுறுத்தியுள்ளார். ஆனால், மாதவன் மறுத்த தால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இனியும் வாசுகி யை விட்டு வைத்தால் பிரச்சனையாகி விடும் என நினைத்த மாதவன், நடந்த சம்ப வத்தை தனது அண்ணன் திருக்கண்ணன் (32), என்பவரிடம் கூறி வாசுகியை சமா தானம் செய்துள்ளார்.  பின்னர், வாசுகியை திருமணம் செய்து வைப்பதாகக் கூறி திருக்கண்ணனும், மாத வனும் செங்கிப்பட்டி அருகே அயோத்திப் பட்டியில் கருவேல மரங்கள் நிறைந்த ஆள்  நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று, அங்குள்ள குளத்தில் வாசுகியை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்து, உடலை அப்படியே விட்டு விட்டு வந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து, புதன்கிழமை கீழத் தூவல் காவல்துறையினர், திருவையாறு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜ்  மோகன் மற்றும் செங்கிப்பட்டி காவல்துறை யினர் உதவியுடன், வாசுகி கொலை செய்யப்பட்ட இடத்தில் சோதனை செய்த னர். குளக்கரை பகுதியில் மண்டையோடு கள், எலும்புகள் என சிதறிக் கிடந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், நாய், நரி குளத்தில் மிதந்த சடலத்தை இழுத்துத் தின்று குதறிப் போட்டு இருக்க லாம் என கருதப்படுகிறது. இதையடுத்து தடயவியல் நிபு ணர்கள், வாசுகியின் மண்டையோடு, எலும்புகள், தலைமுடி, கிழிந்த ஆடை களை சேகரித்தனர். பின்னர் மாதவன், திருக்  கண்ணன் இருவரையும் செங்கிப்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.