தஞ்சாவூர், ஜன.30 - தஞ்சை மணிமண்டபம் அருகே மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் பின்புற நுழைவாயில் கேட் பகுதியில் உயர் மின் கோபுரம் உள்ளது. வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி அளவில் தொழிலாளி ஒருவர் இதில் பாதி கோபுரம் வரை வேகமாக ஏறினார். பின்னர் திடீரெனதான் வைத்திருந்த கயிற்றை எடுத்து கோபுரத்தின் ஒருபுற கம்பியில் கட்டினார். தொடர்ந்து அந்த கயிற்றில் தூக்கி ட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித் தார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தஞ்சை தெற்கு காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை யினர் உயர் மின் கோபுரத்தில் ஏறி நின்ற தொழிலாளி யிடம் விசாரித்தனர். அப்போது, அவர் தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் காமராஜர் நகரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அருள் (46) என்பது தெரியவந்தது. மேலும், புதுக்கோட்டை மாவட்டம் கல்விராயன் விடுதியில் உள்ள தனக்கு சொந்த மான 3 சென்ட் நிலத்தை உறவினர் ஒருவர் உரிமை கொண்டாடுவதாகவும், இதுதொடர்பாக புதுக்கோட்டை ஆட்சியரிடம் மனு அளித்ததால் சிலர் வீடு புகுந்து தாக்கிய தாகவும் தெரிவித்தார். இதுகுறித்து திருவோணம் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் உயர் மின் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித் தார். இதையடுத்து, காவல்துறையினர் அவரை சமாதா னப்படுத்தி கீழே வரவழைத்து தஞ்சை தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.