districts

img

உறவுகளை இழந்து நிர்க்கதியான மாற்றுத்திறனாளி வாழ்வதற்கு உதவி கிடைக்குமா?

தஞ்சாவூர், நவ.21- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே தாய், தந்தை, சகோதரன் என அனை வரையும் இழந்து நிர்க்கதியாக உள்ள மாற்றுத்திறனாளி, வாழ்வதற்கு உதவி கிடைக்குமா என எதிர்பார்த்து உள்ளார்.  பேராவூரணி அருகே உள்ள உப்பு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி பெரியநாயகி. இவர் களுக்கு பிரசாத் (30), பிரகதீஸ்வரன்(25) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் பிரகதீஸ்வரன் இரண்டு கால்களும் பாதிக்  கப்பட்டு, பிறவியிலேயிருந்தே நடமாட முடி யாத மாற்றுத்திறனாளி ஆவார். இவரால் இன்னொருவர் உதவியின்றி எதையும் செய்யமுடியாது.  இந்நிலையில், தந்தை செல்வம் 10 ஆண்டுகளுக்கு முன்பும், தாய் பெரிய நாயகி கடந்த ஆண்டும் உடல் நலக்குறை வால் இறந்து விட்டனர். திருமணமாகாத சகோதரன் பிரசாத் கூலி வேலை செய்து மாற்றுத்திறனாளியான பிரகதீஸ்வரனை பராமரித்து வந்தார்.  இந்நிலையில், கடந்த மாதம் பிரசாத்  தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில்  சென்ற போது சாலை விபத்தில் சிக்கி  இறந்து விட்டார். நிர்க்கதியான பிரகதீஸ்வ ரனை தற்போது அவரது அத்தை கூலி வேலை செய்து பராமரித்து வருகிறார்.  பிரகதீஸ்வரனுக்கு சொந்தமாக இடமும் ஒரு குடிசையும் உள்ளது. எட்டாம் வகுப்புவரை படித்துள்ள பிரகதீஸ்வரன் தற்போது தங்கியுள்ள குடிசை வீடும் இடிந்து கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே, குடிசை வீட்டை செப்பனிட்டும், வெளியில் சென்றுவர மூன்றுசக்கர சைக்கி ளும் இருந்தால் எப்படியாவது பிழைத்துக் கொள்வேன் என கூறியுள்ளார்.  மனிதநேயம் உள்ளவர்கள் பிரகதீஸ்வ ரன் குடிசையை செப்பனிடவும், மூன்று சக்  கர சைக்கிள் வழங்கவும் உதவினால் நல்லது.