districts

100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக வழங்க வேண்டும் தஞ்சை எம்.பி., சு.பழநிமாணிக்கம் அறிவுறுத்தல்

சேதுபாவாசத்திரம், ஜன.27-  தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்தி ரம் ஊராட்சி ஒன்றியம் குருவிக்கரம்பை ஊராட்சியில், சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் வைர வன் தலைமையில் நடைபெற்றது.  தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.சு.பழநிமாணிக்கம், பேராவூரணி எம்எல்ஏ என்.அசோக்குமார், ஒன்றியப் பெருந் தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சுவாதி காமராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ண மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.  பொதுமக்கள் தரப்பில், விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி ஆர்.எஸ். வேலுச்சாமி பேசுகையில், ‘‘சேதுபாவா சத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்க ளில் 100 நாள் வேலை திட்டத்தில் இதுவரை 42 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப் பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இதுவரை வேலை வழங்கப் படாமல் உள்ளது.  மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே சம்பளம் வழங்கப்படு கிறது. வேலை செய்யும் இடத்துக்கு காலை 7 மணிக்கே வரச்சொல்லி நிர்ப்பந்தம் செய்கின்றனர். இதனால், நூறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்ற விருப்பம் இல்லாத நிலை உள்ளது.  பேராவூரணி, பூக்கொல்லை, உடைய நாடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வங்கி களில் தமிழ் தெரியாத மேலாளர்கள் பணி யில் உள்ளனர். இதனால் கிராமப்புறங்க ளில் இருந்து செல்லும் பொதுமக்கள் அவர்களுடன் உரையாட முடியாத நிலை உள்ளது. கல்விக் கடனை முறையாக வழங்குவதில்லை’’ என தெரிவித்தார்.  இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பி னர் ச.சு.பழநி மாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர், பணித்தள பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களை அழைத்து, 100 நாள் வேலைத் திட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து முடிய உள்ள நிதி ஆண்டுக்குள், 100 நாள் வேலை திட்டப் பணிகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.