districts

இந்தாண்டு 9 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்

தஞ்சாவூர், ஜூலை 9 -  தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவிற்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வரும் பணியினை சனிக் கிழமை ஆய்வு செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவில் 104  அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக வாசிப்பு பெரியவர்களுக்கு மட்டும் இல்லை.  வீட்டில் உள்ள குழந்தைகளையும் புத்தகத்  திருவிழாக்களுக்கு அழைத்து வர வேண்டும்.  புத்தகங்களை வாசிக்க குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்த வேண்டும்.  ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வி அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம்  அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதை  அனைவரும் உணர முடியும். பள்ளிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், வளாகத்தில் நுழையும் போது சானிடைசர் பயன்படுத்த வேண்டும்.  தெர்மல் மீட்டர் கொண்டு காய்ச்சல் பரிசே ாதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. அரசின் கொரோனா வழிகாட்டு  முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஏற்கனவே எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்பில் 93 ஆயிரம் மாணவர்கள் படித்த னர். தற்போது கூடுதலாக 52 ஆயிரம் மாண வர்கள் சேர்ந்துள்ளனர்.

அவர்களுக்கு ஏற்க னவே எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ அதே  முறையைப் பின்பற்ற அறிவுறுத்தி உள் ளோம். தற்போது சிறப்பு ஆசிரியர்களை நிய மிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்களை நியமித்த பிறகு முழு மையாக எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடைபெறும். தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி  பெறும் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம்  வகுப்பு வரை 5.34 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளை யும் சேர்ந்து 7 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள் ளனர். மீதமுள்ள 9 ஆம் வகுப்பு முதல் 12  ஆம் வகுப்புகள் என சேர்த்தால் 9 லட்சம் மாண வர்கள் இந்தாண்டு அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் பல்வேறு வசதி களை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம்.  இதன் காரணமாக அரசுப் பள்ளியில் மாணவர் களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. பட்ஜெட்  கூட்டத் தொடரில்கூட பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டுமே ரூ.36,895 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு முழுமையாக பள்ளிகள் நடைபெறுகின்றன. எந்தப் பாடத்தையும் குறைக்கப் போவதாக இல்லை. போதைப் பொருள் ஒழிப்பு தொ டர்பாக காவல்துறையுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.