கும்பகோணம், டிச.4- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட மாற்றத்தினாளிகள் 300 பேர் சொந்த வீடு இல்லாமலும் குடிமனை இல்லாமலும் மிகவும் கஷ்டப் பட்டு வந்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமகளுக்காக சங்கம் சார்பில் மாவட்ட, தாலுகா அளவில் நடை பெற்ற மாற்றுத்திறனாளிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
அவ்வப்போது தொடர்ந்து அதிகாரிகளை சந்தித்து மாற்றுத் திறனாளிகளுக்கு விலையில்லாத குடி மனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாலை கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மற்றும் கும்பகோணம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் க. அன்பழகன் ஆகி யோர் முதல் கட்டமாக கும்பகோணம் தாலு காவிற்கு உட்பட்ட 48 மாற்றுத்திறனாளி களுக்கு கும்பகோணம் அருகே உள்ள சேஷம்பாடி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை விலையில்லா குடிமனை மற்றும் பட்டா வழங்கினர்.
இந்நிகழ்வில் கும்பகோணம் சார் ஆட்சியர் கிருத்திகா விஜயன், வட்டாட்சி யர் சண்முகம், கும்பகோணம் மாநகர மேயர் சரவணன். மாவட்ட ஊராட்சி துணை தலை வர் எஸ்.கே.முத்து, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் பழ.அன்பு மணி, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.